கைக்குண்டு ஒன்று மீட்பு

181 0

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போகம பகுதியில் நேற்று (14) கற்பாறைகளுக்குள்  மறைத்து வைத்திருந்த நிலையில், கைக்குண்டு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் போடப்பட்டிருந்த கருங்கற்பாறைகளுக்குள்ளே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

 

மேலும், அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைக்குண்டினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கந்தளாய் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில், கைக்குண்டினை செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.