யுத்த குற்றச்சாட்டு – நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது – நீதியமைச்சர்

381 0

52676_wijayaநாட்டின் இறைமை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவித செயற்பாட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய – பனாகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இன்னும் சில நாட்களில் நாட்டில் யுத்த குற்றச்சாட்டு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அரசியல்வாதிகள் சிலர் கூறி வருகின்றனர்.

அந்த செயற்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது.

யார் அந்த தீர்மானத்தை மேற்கொண்டது என்பது தொடர்பில் அந்த அரசியல்வாதிகள் தெளிவுப்படுத்துமாறும் நீதியமைச்சர் கோரியுள்ளார்.

நாட்டில் யுத்த குற்றச்சாட்டு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.