அனைத்து அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 06) ஆரம்பம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த 20 மாதம் ஆம் திகதி நிறைவடைந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் ஜூலை 8 வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

