வீட்டிலிருந்து தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு – களுத்துறையில் சம்பவம்

109 0

களுத்துறை, ஹினடியங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

69 வயதுடைய தந்தை மற்றும் 33 வயதுடைய மகள் ஆகிய இருவரின் சடலங்களே நேற்று (30) இரவு குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தந்தை வீட்டில் நாற்காலியில் சடலமாக காணப்பட்டதாகவும், மகள் வீட்டின் அறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் நேற்று இரவு களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.