ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு வலிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 50 ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப்போராட்டம் கொழும்பு கொளுப்பிட்டி பகுதியில் ஆரம்பித்து காலிமுகத்திடல் கோட்டா கோ கமவை வந்தடைந்துள்ளது.
இப்போராட்டத்தில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் ஆயிரக்காணக்கானவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

