மக்கள் வங்கியின் தலைவரால் சாணக்கியனுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்

146 0

கடந்த ஐந்து வருடங்களில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களை பெற்றவர்களில் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள் வங்கியின் தலைவரினால் தனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் குறித்த கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் கூறியுள்ளார்.

இதேவேளை, 3 பில்லியன் ரூபா பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.