தமிழக சிறையில் உள்ள உறவுகளை விடுவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்

151 0

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வின்போது தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடரும் ஈழத்தமிழ் உறவுகளை விரைவில் விடுவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்று மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் மகாலிங்கம் நந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

கடவுச்சீட்டு இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில் மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் உணவொறுப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஈழ உறவுகளை அவர்களின் வழக்குகளை விரைவாக முடித்து தத்தமது உறவுகளுடன் அவர்கள் வாழ வழி அமைக்குமாறு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது.

தமிழக சிறையில் உள்ள உறவுகளை விடுவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம் (Photos)

 

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைச் சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஆமோதித்திருந்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதேவேளை குறித்த தீர்மானத்தில் அவர்களை விடுவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் வழக்குகளை விரைந்து முடித்து அனுப்பி வைக்குமாறு தமிழக முதல்வரையும், இலங்கைக்கான இந்தியத் தூதரையும் விநயமாகக் கேட்டு நிற்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.