யாழ். சாவகச்சேரியில் வேன் விபத்தில் இருவர் காயம்

184 0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வேன் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் , வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி  விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .