பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

219 0

பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

போதிய எரிபொருள் இருப்பின் நாளை முதல் பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.