முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

233 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமான நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.