கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சடலம் மீட்பு

220 0

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை  பொது மக்களால் ; அடையாளம் காணப்பட்டுள்ளது,

43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக் கொண்டுசெல்லப்படவுள்ளது.

கிளிநொச்சி  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.