றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிணை மனு நிராகரிப்பு

175 0
றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ. கீர்த்திரத்ன மற்றும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.றம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.