எதிர்வரும் காலங்களில் மீண்டும் பிரகாசிக்கவுள்ள தமிழர் விடுதலை கூட்டணி : வீ. ஆனந்தசங்கரி

196 0

நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளது என தமிழர் விடுதலை கூட்டணி அணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த கட்சியின் தலைவரும்,சட்டத்தரணியுமான சிறீதரன் தெரிவிக்கையில்,

தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் கடந்த நாட்களாக இருந்த குழப்பகரமான நிலை மாற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி 1979ம் ஆண்டுகளில் கொண்ட கொள்கையில் பயணிக்கும். தனி நாடல்ல. தமிழர்களிற்கான தனி அரசைப் பெற்றுக் கொடுப்பதில் உறுதியுடன் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மகளிர் பேரவைத் தலைவி கருத்து தெரிவிக்கையில், தமழர் விடுதலைக் கூட்டணியில் நிர்வாக செயற்பாடுகளிற் பங்கெடுத்துள்ள நாம் எதிர்வரும் மே 18ம் திகதி தமிழர் விடுதலை கூட்டணி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய பின்னர் மக்களிற்கான அரசியல் பணியை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில் குறித்த கூட்டத்தில் சிரேஷ்ட தலைவராக சட்டத்தரணி ப. சிறீதரனும், செயலாளர் நாயகமாக மீண்டும் வீ ஆனந்தசங்கரியும் ஏகமனதாக தெரிவானார்கள்.

நிர்வாகச் செயலாளராக க. பூலோகரட்ணமும், பொருளாளராக தி.சஞ்சயனும், இணைப்பொருளாளராக வேதாரணியனும் தெரிவாகினர். இளைஞர் பேரவைத் தலைவராக க.சபேசனும், மகளிர் பேரவைத் தலைவராக சூரியபிரதீபா வாசவனும், சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவராக ஐயம்பிளை யசோதரனும், தொழிற்சங்கத் தலைவராக சி.தயாபரனும் தெரிவாகியுள்ளனர்.