யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற அன்னைபூபதித்தாயின் நினைவு வணக்க நிகழ்வு.

470 0

யேர்மனி முன்சன் நகரத்தில் தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும் விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 34வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 23.04.2022 சனி அன்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.