ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் மூன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில்,
சீதா அரம்பேபொல – கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
டயானா கமகே – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
விஜித பேருகொட – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

