விநாயகர் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

272 0

மட்டக்களப்பு – நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் முற்றத்தில் விநாயகர் திருவுருவச் சிலையானது “சௌபாக்கிய கணபதி” எனும் நாமத்துடன்   திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜி.ஸ்ரீவித்யன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண்சத்திரசிகிச்சை பிரிவு வைத்தியர் துஷ்யந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், கிராம பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பூஜை நிகழ்வில் பஜனை, பஞ்சபுராணம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பிரசாதம் வழங்கல் ஆகிய நிகழ்வுகளுடன்  நிறைவடைந்தது