தரம் குறைந்த டீசலை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அவதானிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், மாதிரிகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழன் அன்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் தரம் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அனைத்து பஸ் சாரதிகளும் அதன் பாவனை தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதும், அதிகாரிகளிடம் புகார் செய்வதும் தனது உத்தியோகபூர்வ பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருளின் தரம் குறித்து உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட இலங்கைக்கு தகுதியான அதிகாரம் இல்லை என்பதால் டீசல் மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த முறைகேடு காரணமாக பெரும்பாலான பஸ்களின் இயந்திரம் பழுதாகிவிட்டதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.

