தெல்தெனிய பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை

153 0

தெல்தெனிய – ரங்கல பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நள்ளிரவு 1.00 மணியளவில் குறித்த நபர் தனது வீட்டில் உறங்கிக்  கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.