கேள்வி நேரத்தில் கேள்வி மட்டும் கேளுங்கள்- என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

218 0

உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.சட்டப்சபையில், வினாக்கள் விடைகள் நேரத்தின்போது பேசிய ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதலமைச்சரை புகழ்ந்து பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும் கட்சியாக தற்போது இருக்கும் போதும், தொடர்ந்து வலியுறுத்துவது உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும், குறிப்பாக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை கட்டாயம் பின்பற்ற மீண்டும் வலியுறுத்துவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.