இலங்கையை வந்தடைந்த கலாநிதி நந்தலால் வீரசிங்க

135 0

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ள மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு தாம் இணங்குவதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த தினம் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்காக இன்று (07) நாட்டை வந்தடையவுள்ளதாகவும், தற்சமயம் வௌிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் கடந்த 04 ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.