பயங்கரவாத தடை சட்டம் – நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

323 0

பயங்கரவாத தடை சட்டம் த்தை நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கியநாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஜோன் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து, துன்புறுத்தல்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி இருந்தார்.

இலங்கையில் கைதாகின்றவர்கள் துன்புறுத்தப்படும் நிலைமைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.