தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நீண்டகாலமாக இடம்பெறாமையால் உடனடியாக நாளையே (05) கூட்டதைக் கூட்டுமாறு டெலோ வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (04) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நாட்டு சூழலைக் கருத்தில்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு, அக் கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

