விவசாயக் காணியொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

157 0

ஹம்பாந்தோட்டை தங்கல்ல நேடொல்பிட்டிய வெலிஆரே பிரதேசத்தில் விவசாயக் காணியொன்றிலிருந்து  வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை, தங்கல்ல பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

கோச்சியாய வீதி, பேரகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில். பிரேதப் பரிசோதனைக்காக சடலம்  தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்