பல்கலைகழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!

156 0

பேராதெனிய பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கண்டிக்கு பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸாரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.