இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல! – பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

162 0
 

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இயன்றளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் நேற்று உரையாற்றிய பிரதமர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அனைத்து தரப்பினரையும் அடுத்த அமர்வில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

“சித்திரை புத்தாண்டு நெருங்கி வருவதால், அடுத்த சில நாட்களில் எரிபொருள் மற்றும் உணவு தீர்ந்துவிடும் என்று பொய்யான அச்சத்தை உருவாக்க வேண்டாம்,” என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை உருவாக்கவில்லை என பிரதமர்  மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சில பிரச்சினைகளுக்கு அரசாங்கமே காரணம் எனக் கூறி சிலர் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பாரிய அசௌகரியங்களை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இயன்றளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.