சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

171 0

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி இளைஞரொருவருக்கு ஏற்பட்ட பாரிய விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேனகா விஜேசுந்தர மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.