முல்லைத்தீவு மாவட்ட சிகையலங்கார நிலையங்களிலும் சேவை கட்டணம் அதிகரிப்பு

149 0

முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையினை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகை அலங்கார நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12 வயதிற்குக் குறைவானவர்களுக்கு முடிவெட்ட 250 ரூபாவும், பெரியவர்களுக்கு முடிவெட்ட 300ரூபாவும் அறவிடப்படுவதாக தெரியவருகிறது.

பெண்பிள்ளைகளுக்கு முடிவெட்ட 500 ரூபாவாகவும், முடிவெட்டி டை அடிக்க 550 ரூபாவாகவும் மேலதிக சேவைக்கேற்ற வகையில் கட்டணங்கள் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery