போதைபொருள்களுடன் ஒருவர் கைது

225 0
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ஹெரோய்ன், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த நபரொருவர், நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றிவளைப்பில், வாழைச்சேனை கோவில் வீதியில் வைத்து மேற்படி நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோய்ன், 200 மில்லிக்கி  கிராம் ஐஸ் போதை பொருள், 1,120 மில்லிக்கிராம் கஞ்சா, 4 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவரை, வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.