பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குக!

226 0

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பேச்சாளர்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் அந்த தகவல்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

உங்களது சமூக வலைத்தளங்களில், நட்பு பட்டியலில் உள்ள சிலரால் குறித்த தரவுகள் பெறப்பட்டு, நீங்கள் இல்லாத போது வீட்டில் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, அவ்வாறான பதிவுகளை தவிர்ப்பது நல்லது என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்