132 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் விடுத்துள்ள சிவப்பு அறிவித்தல்

313 0

இலங்கையர்கள் 132 பேருக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராகவே இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் தற்போது துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 95,000 சந்தேக நபர்களை பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கைது செய்துள்ளனர்.