இருவேறு சம்பவங்களில் 195 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

411 0

10-1468101327-vlcsnap-2016-07-09-19h09m24s67விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 195 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் தொடரூந்து எழும்பூர் நிலையத்துக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்தது.
அப்போது தொடரூந்து பாதுகாப்பு படை தலைமை அதிகாரி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தொடரூந்தில் பயணித்த இருவரிடம் இருந்து 95 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, சென்னை டிபி சத்திரம் பழைய கல்லறைச் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற டிபி சத்திரம் காவல்துறையினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.