1500 இழுவை படகுகளுக்காவது அனுமதியளிக்கப்பட வேண்டும்

356 0

!தமிழகத்தின் 250 இழுவை படகுகளை தமது கடற்பகுதியில் அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவலை தமிழக கடற்றொழிலாளர்கள் வரவேற்றுள்ளார்கள்.

தமிழகத்தின் இயந்திர படகு உரிமையாளர் சம்மேளனத்தின் இராமநாதப்புரம் மாவட்ட செயலாளர் பி.ஜேசுராஜ் இந்த வரவேற்பை வெளியிட்டிருக்கிறார்.

இதேவேளை, திருச்சியில் உள்ள கடற்றொழிலாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் இந்த உத்தேச யோசனை போதுமானதல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

கரையோரத்தின் ஆறு மாவட்டங்களுக்கும் பகிரும் போது குறித்த 250 படகுகள் என்பது குறைந்த எண்ணிக்கையாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே 1500 இழுவை படகுகளுக்காவது இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் இராமநாதப்புரம் கடற்றொழிலாளர்கள் தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.