தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி – சோனியா காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

441 0

kushboo_2812455fதமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிப் பணிகள் முடங்கியுள்ளன.
தமிழகத்தைப் போல உத்தரப்பிரதேசம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதிய தலைவர்களை நியமிக்க கடந்த ஒரு மாத காலமாக கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு உத்தரப்பிரதேச மாநிலத் தலைவராக ராஜ்பப்பர் அறிவிக்கப்பட்டார்.
எனினும், தமிழகத் தலைவர் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் ராகுல் காந்தியை சந்தித்த காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, நேற்று சோனியா காந்தியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.