ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

333 0

srilankan-refugees-return-from-india_CIபோர் கால சூழ்நிலையால் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரக அனுசரணையில் சுமார் 40 பேர் வரை இலங்கை திரும்பினர்.
மதுரை மற்றும் சென்னையில் இருந்து வந்த இரண்டு வானுர்திகளில் இவர்கள் இலங்கை வந்தடைந்தனர்.

இவர்கள் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இவர்களுக்கு ஆரம்ப கட்ட நிதியுதவிகளை ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வழங்கியுள்ளது.