பொரல்லை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு விவகாரம்! ஓய்வு பெற்ற மருத்துவருக்கு பிணை

176 0

பொரல்லையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஓய்வு பெற்ற மருத்துவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இன்று பிணையை அனுமதித்தது.

கடந்த ஜனவரி 11ஆம் திகதியன்று தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓய்வுப்பெற்ற மருத்துவர் சில நாட்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

ஏற்கனவே இந்த கைக்குண்டு தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு அவர்களும் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.