கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபரி கைது

159 0

மட்டக்களப்பு, சீலாமுனை பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை நேற்று (20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீட்டை நேற்று காலை 11 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை 200 கிராம் கேரள கஞ்சாவுடன் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.