இந்திய குடியரசு தினத்தையொட்டி உலகின் மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிபா முழுவதும் இந்திய கொடியின் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.
நாட்டின் 68வது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ள உள்ளார்.
இதனையொட்டு ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இந்திய மூவர்ணக் கொடியின் நிறத்தில் விளக்குகளை அமைத்து ஒளிரவிடப்பட்டுள்ளது.