சனி, ஞாயிறு மின் வெட்டுக்கு அனுமதி..!

173 0

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை (12) முற்பகல்10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இடையே நாளை மறுதினம் (13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.