துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

209 0

கோனாபினுவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது பிரதேசவாசிகள் அவர்களை தடுத்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் ரி 56 ரக துப்பாக்கி மூலம் துப்பாக்கி சூடு மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நபர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி, 45 தோட்டாக்கள், ரி56 ரக மகசின் மற்றும் இரண்டு வாகன இலக்கத் தகடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 31 வயதுடைய பியதிகம கிந்தோட்ட பிரதேசத்தை சேர்ந்தவரும் மற்றைய சந்தேகநபர் 29 வயதுடைய வீரகொட, மீட்டியாகொட பிரதேசத்தை சேர்ந்தவரும் ஆவார்.

சந்தேகநபர்கள் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.