கோட்டபய ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

398 0

Gota.இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு, சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமக்கான இராணுவ பாதுகாப்பை நீக்க வேண்டாம் என கோட்டபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அதனை பொருட்படுத்தாது இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய சமாதன சூழலை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.