உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் 8 பேர் திருச்சி வந்தனர்

133 0

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன்  நாட்டில் ரஷிய ராணுவ படையினர் கடந்த 9 நாட்களாக தீவிர வான்வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார சீரழிவுக்கு வழி வகுக்கும் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே தொடர்ந்து போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த இரு தினங்களாக புதுடில்லியில் இருந்து விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்கு சென்று அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை உக்ரைனில் இருந்து 628 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு புதுடில்லி வந்தடைந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்து திருச்சியை சேர்ந்த மருத்துவ மாணவர்களான ராமேஸ்வரத்தை சேர்ந்த பவதாரிணி, மேக்னா ஜலாலுதீன், துறையூரைச் சேர்ந்த அபிஷேக் பாலமுருகன், ஸ்மிருதி சுபிக்ஷா, கிட்டு மகேந்திரன், புதுக்கோட்டையைச் சேர்ந்த விஷ்ணு துரை ராஜ், அஸ்வின் மற்றும் பொன்னமராவதியைச் சேர்ந்த தம்பி பிரபாகரன் ஆகிய 8 பேரும் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று திருச்சி அழைத்து வரப்பட்டனர்.

11.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் திருச்சி மாவட்ட பா.ஜ.க. வினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.