பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

133 0

நாவுல, எலஹெர பிரதேசத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் வாகனச் சோதனைக்கு சென்ற போது பிரச்சினை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.