யாழ். பெண் கொலை; சந்தேகநபர் கைது

185 0

யாழ்ப்பாணம், சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூச்சாடியால் அடித்துக் கொலை செய்த பின்னர், பெண் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கொலை நடந்த வீட்டுக்கு அருகில் இருந்த சி.சி.டி.வி கமெரா காட்சிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

காணொளியில் சந்தேகநபர் ஓட்டோவில் தப்பிச் செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி இருந்த பொலிஸார், யாழ்ப்பாணம் – முலவை எனும் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை, யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.