உக்ரைன் மீதான போருக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷியாவுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, உக்ரைன் மீது ரஷியா நியாய மற்ற வகையில் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும்.
இந்த போருக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷியாவுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜோபைடன் ஜி-7 அமைப்பு நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

