யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 40 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் ஒரு இலட்சம் மில்லிலீற்றர் கோடா என்பவற்றுடன் , 47 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

