ஊடகத்துறையில் 50 வருடங்களைக் கடந்த தில்லைநாதன் கெளரவிப்பு

260 0

ஊடகத்துறையில் 50 வருடங்களை கடந்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு இன்று (20) கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

மைக்கல் நேசக்கரம் அமைப்பினூடாக இந்த கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தேசிய பத்திரிகை வீரகேசரியில் 50 வருடங்களும் ஊடகத்துறையில் 57 வருடங்களையும் கடந்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
மைக்கல் நேசக்கரம் அமைப்பின் தலைவர் த.வேணுகானன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன், சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியலாளர்களான ந.பொன்ராசா, க.கனகராஜா, அரசியல் ஆய்வாளர் ஹரிகரன், மற்றும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் ந.வித்தியாதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.