மூளாயில் கஞ்சாவுடன் நால்வர் கைது

248 0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் கஞ்சா பாவித்தவாறு 33 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த நால்வர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை நேற்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் வட்டுக்கோட்டை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.