6 இந்திய மீனவர்களும் யாழ். சிறையில் அடைப்பு

363 0

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்றிரவு காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கை விசாரித்த நீதிவான் கஜநிதிபாலன் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.