ஆப்கானிஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆள்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை உயிருடன் மீட்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்து வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

