மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன்.

779 0

மனிதச் சங்கிலி நீளட்டும் !

——————————————

“போராட்டம் ”

இயற்கையின் ஒவ்வொரு

வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது !

ஓர் வித்து மண்ணைப் பிளந்து வெளிவருவது

போராட்டத்தின் வெற்றியாகும் ..

ஓர் நதி மேடு பள்ளங்களை தாண்டி

கடலில் சேர்வதும் போராட்ட வெற்றியாகும் ..

தமிழா ! இது உனக்கும் பொருந்தும் விதியாகும் ..

நம் தலைவன் சொன்னான் ..

“இயற்கை நம் வழிகாட்டி ”

தமிழா ! நீ லெமுரியா கண்டத்தின்

முதல் மரபின் தோற்றம் ..

எத்தனை போரைக் கண்டுவிட்டாய் !

வெற்றிவரும்வரை போராடு ..

வெற்றிபெற்றபின்பும் போராடு ..

போராட்டம் தொடர்நிலையே !

போராட்டமே பலத்தின் முதிர்ச்சி !

இன்று உன் கையில்

மனிதச்சங்கிலி போராட்டம் !

தமிழீழ சுதந்திரத்தின்

உரிமை மீட்பு போராட்டம் !

எமது “இலக்கு “தமிழீழமே !

முடிந்தமுடிவில் தலைசொறிவு ஏன் ?

போராட்டமே சுதந்திரத்தின் படிக்கற்கள் !

ஏறிச்செல் வெற்றி நிச்சியம் !

விமர்சனங்களை ஏற்றுக்கொள் ..

அதன்விடையாக வெற்றியை கொடு !

இது மனிதச்சங்கிலி இணைப்பல்ல ..

தமிழீழ உணர்வின் இணைப்பு ..

தமிழீழ மக்களின் பலத்தின் இணைப்பு ..

ஜேர்மனிய அரசின் இதயத்தை திறக்கும் இணைப்பு ..

இது முடிவல்ல ..தொடர்நிலையே ..

சங்கிலியை இணைப்போம்

தமிழீழ உரம் விதைப்போம் .

அகரப்பாவலன்.